Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷம் குடித்து வாலிபர் சாவு

வடலூர், டிச. 4: வடலூர் அருகே ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன்(27), திருமணம் ஆகவில்லை. கடந்த 20ம் தேதி இளவரசனை, வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறாயே என அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த இளவரசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.