Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமியுடன் உல்லாசம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி, ஜூலை 25: சின்னசேலத்தில் 17 வயது சிறுமியை சீரழித்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த நதியா மகன் ஆகாஷ்(20) இவர் 17வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பத்தை கலைப்பதற்கு பப்பாளி மற்றும் எள்ளு சாப்பிட்டதாக தெரிகிறது. இதில் கரு கலைந்ததால் அந்த சிறுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், ஆகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.