Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி பெண் பலி

விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். விழுப்புரம் அருகே மழவராயனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி(23). நேற்றுமுன்தினம் தினேஷ்குமார் தனது மனைவியை இருசக்கரவாகனத்தில் அழைத்துகொண்டு சொந்தகிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து ஏனாதிமங்கலம் நோக்கிசென்றபோது வளைவில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் நேருக்குநேர் மோதியது. இதில் கீழே தூக்கிவீசப்பட்ட சிவரஞ்சனி பலத்த காயமடைந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.