Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேஸ் அடுப்பு வெடித்து மூதாட்டி பரிதாப பலி

கோவை, ஆக. 4: கோவை ஆர்எஸ் புரம் அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்க மறந்து விட்டார். இதனால் கேஸ் அடுப்பு வெடித்து மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த அவரது மகன் மனோகர், தீக்காயத்துடன் கிடந்த மாரியம்மாளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.