கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
கோவை, டிச. 11: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிர ஏற்பாடு செய்துவருகின்றனர். கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தனது காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச்சென்று கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகிய 3 பேர் துடியலூரில் பதுங்கி இருந்தபோது போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த 2ம் தேதி 50 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே கைதான 3 பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீசார் 3 பேர் மீதும் 2வது கட்டமாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பாலியல் வழக்கில் கைதான 3 பேர் மீதும் முதல்கட்டமாக 50 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடந்த தொடக்கத்தில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளது. நடந்த சம்பவங்கள், வாக்கு மூலங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


