Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விபத்தில் உயிரிழந்த மாணவன் உடல் உறுப்புகள் தானம்

அம்பத்தூர் ஜூலை 25: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லஷ்மி. இவர்களது மூத்த மகன் சந்தோஷ் (24), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் ஹேம்நாத் (20), நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் ஒருவரை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, அங்கிந்து ஹேம்நாத் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கள்ளிக்குப்பம் சர்வீஸ் சாலையில் மது போதையில் வடமாநில வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, ஹேம்நாத் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹேம்நாத் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஹேம்நாத்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டால் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹேம்நாத் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதையடுத்து, அவரது இதயம், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் தானமாக வழங்கினர். விபத்தில் படுகாயமடைந்து அவரது கண்கள் செயல் இழந்ததால், கண் தானம் அளிக்க முடியவில்லை. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.