Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரதட்சணை புகார் விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல்: மாமியார், மருமகள் மருத்துவமனையில் அனுமதி

பெரம்பூர், ஆக.22: காவல் நிலையத்தில் இரு தரப்பினர் ஆய்வாளர் முன்னிலையில் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொளத்தூர் கம்பர் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (58). இவரது மகன் ஹரி பாஸ்கர், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு பிரபல மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்தார். ஒரு வருடத்திற்குள் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஹரி பாஸ்கர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக திவ்யா கொடுத்த புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, ஹரி பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளர் பெமிலா ஷெர்லி, வழக்கு விசாரணைக்காக இரு தரப்பினரையும் நேற்று முன்தினம் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வர வைத்துள்ளார். அப்போது ஆய்வாளர் அறையிலேயே இருதரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். போலீசார், நீண்ட இழிபறிக்கு பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதில் திவ்யா அடித்ததாக கூறி அவரது மாமியார் உமா மகேஸ்வரி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், ஹரி பஸ்கர் மற்றும் அவரது தாயார் உமா மகேஸ்வரி ஆகியோர் தாக்கி விட்டதாக கூறி திவ்யா பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருதரப்பு புகாரையும் பெற்று பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திலேயே இரு தரப்பினர் ஆய்வாளர் முன்னிலையில் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.