Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர் எச்சரிக்கை

சென்னை, ஆக.20: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த வழிமுறைகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.

சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.

 அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.

 பிரசாத விநியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.

 பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்இடி பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.

அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்த கூடாது.

சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.

 சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற ரசாயனசாயங்கள், எண்ணெய் வண்ண பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

 சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.

 வண்ண பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.

 பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று பொது இடங்களில் கொட்ட கூடாது.

 அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.

பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.

ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.