ஆலந்தூர், அக்.9: மடிப்பாக்கம் அருகே உள்ளாகரம் அலெக்ஸ் தெருவை சேர்ந்தவர் வசந்தா(40). மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி(17), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வசந்தா நேற்று மாலை வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, தமிழ்ச்செல்வி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வசந்தா கதறி அழுதார். இதுகுறிட்டு உறவினர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் இறந்த தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.