தேவையானவை:
கோதுமை மாவு,
துருவிய தேங்காய்,
சர்க்கரை, நெய்,
முந்திரி,
எண்ணெய்,
உப்பு.
செய்முறை:
முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், சர்க்கரை, பொடித்த முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.
பின்னர், பிசைந்து வைத்துள்ள மாவில் சின்ன சின்ன பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும். அதில், பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு அதில் பூரியை சுட்டு எடுத்தால் மடக்கு பூரி தயார்.