Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோதுமை மாவு வடை

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்,

ரவை - அரை கப்,

பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

தயிர் - அரை கப்,

தண்ணீர் - ஒன்றரை கப்,

பச்சை மிளகாய் - 2,

பெரிய வெங்காயம் - ஒன்று,

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை, கருவேப்பிலை - ஒரு கைப்பிடி,

சீரகம் - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

சமையல் சோடா - கால் டீஸ்பூன்.

செய்முறை :

கோதுமை மாவு வடை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அதனுடன் அரை கப் அளவிற்கு ரவை, அரை கப் அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரே கப்பில் எல்லாவற்றையும் அளந்து சேர்த்துக் கொள்வது நல்லது. பின்னர் 3 டீஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வடை கிரிஸ்பியாக வரும். இவற்றுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள், தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் உரித்து துருவிச் சேர்க்கலாம் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள். அரை ஸ்பூன் அளவிற்கு சீரகம் தாளித்து சேருங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு கைப்பிடி நிறைய பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தழைகளை உங்கள் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவில் இருக்கும் வாயுவை எடுக்க கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்வது நல்லது. பின்னர் உள்ளே மெத்தென்றும் வெளியே கிரிஸ்பியாகவும் வடை வருவதற்கு கால் ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும். விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது.

பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும், கெட்டியான மாவை அப்படியே எண்ணெயில் பொரித்து எடுக்க போகிறோம். 5 நிமிடம் நன்கு ஊறிய பிறகு மாவை ஒரு முறை நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுட்டு எடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள். அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து

மாலையில் டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக ஆரோக்கியமாக இருக்கும்.