Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு -¼ கப்

அரிசி - 1 கப்

தண்ணீர் - 2 கப்

சின்ன வெங்காயம் 15

தக்காளி - 1

பூண்டு - 3

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மிளகு பொடி - 1 சிட்டிகை

பெருங்காயம் - ¼ டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1-2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிது நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் நன்கு கொதி வரும்போது ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மிளகு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து குக்கரை மூடவும். இது ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கும் வரை குக்கரை திறக்க வேண்டாம். இப்போது நெய் சேர்த்து கிளறவும். அரிசி பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு அல்லது வெண்டைக்காய் வறுவல் உடன் சேர்த்து சாப்பிட்டால் நாக்கில் டேஸ்ட் நடனமாடும்.