தேவையான பொருட்கள்:
1/2 கி மட்டன்
2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
1பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
1 காய்ந்த மிளகாய்
1 பட்டை
2 லவங்கம்
1 ஏலக்காய்
1பிரியாணி இலை
1/2 டீஸ்பூன் சீரகம்
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
10 கறிவேப்பிலை
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா
சிட்டிகை மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தண்ணீர்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பின் வெங்காயம் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.மட்டன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய்பிரிந்து வரும் நிலையில் இறக்கி சூடாக பரிமாறவும்.