தேவையானவை:
துவரம் பருப்பு - 150 கிராம்,
வெந்தயம் - ½ ஸ்பூன்,
சுக்காங்கீரை - 1 கட்டு,
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 3,
மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்.
தாளிக்க:
வெந்தயம் - ¼ ஸ்பூன்,
கடுகு - 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயம் - ½ ஸ்பூன்,
உப்பு - திட்டமாக,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
பருப்பையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கீரையை பருப்பு, வெந்தயத்தோடு சேர்த்து 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். பருப்போடு சேர்ந்து கீரை நன்கு குழைந்ததும், மத்தால் கடையவும். திட்டமாக உப்பு சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு பதத்தில் வந்ததும் இறக்கி, தாளிக்கவும். தாளிப்பில் சிறிது பூண்டு, வெங்காயம் விரும்பினால் சேர்க்கலாம்.