Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரை சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 10

வரமிளகாய் - 2

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

தண்ணீர் - 5 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

முருங்கைக்கீரை - 2 கைப்பிடி

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து நீரில் 2-3 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் பூண்டு பற்களை தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் 5 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, கழுவி ஊற வைத்துள்ள அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் நெய் ஊற்றி நன்கு கிளறினால், சுவையான கீரை சாதம் தயார்.