தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
பசலைக் கீரை இலைகள் 1 கப்
வெந்தயம் 1½ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தை கலந்து, அரிசியையும் பருப்பையும் தனித் தனியாக நான்கைந்து மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை பத்து மணி நேரம் நொதிக்க விடவும். பசலை இலைகளை கழுவி, சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பின் குளிர்ந்த நீரில் அலசி, மிக்ஸியில் மசிய அரைத்து, இட்லி மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி இட்லிகளை வார்த்தெடுக்கவும்.