தேவையானவை:
கடலை மாவு - 300,
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, சீரகம் - தேவையான அளவு,
சின்ன வெங்காயம் நறுக்கியது - 10.
செய்முறை:
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது) அரைத்துக் கொள்ளவும். கடலை மாவில் சோம்பு, சீரகம், மிக்ஸியில் அரைத்ததையும், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வாணலியில் எண்ணெய் சூடானதும் பக்கோடா பொரித்து எடுக்கவும். க்ரிஸ்பியாக இருக்கும்.