Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இறால் புலாவ்

தேவையான பொருட்கள் :

இறால் – 250 கிராம்அரிசி – 1 கப்

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கிராம்பு – 4

இலவங்கப்பட்டை – 3

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

இஞ்சி, பூண்டு விழுது, – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 1 கப்

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம். கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!