தேவையான பொருட்கள்
1மீடியம் சைஸ் காலிஃப்ளவர்
2மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
2 தக்காளி
2பச்சை மிளகாய்
1இன்ச் இஞ்சி
10 பூண்டு பற்கள்
2 ஸ்பூன் வரை கொத்து மல்லித் தூள்
1ஸ்பூன் வரமிளகாய் தூள்
1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
தேவையான அளவுஉப்பு
1இன்ச் பட்டை
3கிராம்பு
1ஏலக்காய்
1ஸ்பூன் சோம்பு
1ஸ்பூன் கசகசா
2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
3/4ஸ்பூன் கடுகு
கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
2 ஸ்பூன் நெய்
அலங்கரிக்க
2 டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்த வெங்காயம்
ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை
இட்லி ஊற்ற
2 கப் இட்லி மாவு,
செய்முறை
தேவையான அனைத்து பொருட்களையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து எடுத்து, உப்பு சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து அலசி எடுத்துக்கொள்ளவும்.2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். அதேபோல் 2 தக்காளியை அரிந்து கொள்ளவும்.. பூண்டு தோலுரித்துக் கொள்ளவும். கசகசாவை லேசாக சூடு செய்து கொள்ளவும். மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடு ஆன பிறகு கடுகு சேர்த்து பொரியவிடவும். 2 பச்சை மிளகாயை வாணலியில் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். இது செய்வதற்கு முன்பு வெங்காயத்தை உரித்த பூண்டு மற்றும் பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் அதேபோல தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியவுடன் வெங்காயத்தை சேர்த மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஆயில் லேசாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.இப்போது இதில் மஞ்சள்தூள் வரமிளகாய்த்தூள் உப்பு மற்றும் வர கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசம் போகும் வரை கிளறி விடவும். பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.இதற்கிடையில் மிக்ஸியில் தேங்காய் துருவல் மற்றும் கசகசா, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். காய் நன்கு வதங்கியவுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும். காய் முக்கால் பதத்திற்கு வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். காய் முழுக்க நன்கு வெந்துவிடும்.பிறகு கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு கொதி விடவும்..பொடியாக அரிந்து வைத்த கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து ரெடி செய்து கொள்ளவும்.இப்போது இட்லி மாவை ஒரு டீஸ்பூன் அளவு உள்ள மெசர்மென்ட் ஸ்கூப்பில் எடுத்து, தயாராக எண்ணெய் தடவி வைத்த மினி இட்லி தட்டில் ஊற்றவும். இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் இட்லி தட்டுகளை அடுக்கி ஏழு அல்லது எட்டு நிமிடம் வரை போட்டு வேகவிடவும்.ஒரு நிமிடம் ஆறவிட்டு ஸ்பூனில் தண்ணீர் நனைத்து மெதுவாக இட்லியை உடையாமல் எடுக்கவும். கொஞ்சம் நெய், பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை, கால் வெங்காயம் பொடியாக அரிந்தது எடுத்து வைத்துக் கொள்ளவும்.பவுலில் சிறிது காலிபிளவர் கிரேவி சேர்த்து அதன் மேல் இட்லியை அடுக்கவும். அதன்மேல் நெய் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு காலிபிளவர் உடன் கிரேவியை அதன்மேல் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து ஸ்பூன் வைத்து பரிமாறவும். சுவையான மினி இட்லி கோபி கிரேவி தயார்.