தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி- 1/4 கப்
பயத்தம் பருப்பு - மூன்று டேபிள் ஸ்பூன்
அரிந்த மென்மையான காய்கறிகள் அனைத்தும் சேர்ந்து- ஒரு கப்
தேங்காய் பால்- அரைகப்
சின்ன வெங்காயம் அரிந்தது- கால் கப்
கடுகு ,உளுந்து- தாளிக்க தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
புதினா மல்லி கருவேப்பிலை எல்லாம் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
காய்ந்த மிளகாய்- ஒன்று
எண்ணெய், உப்பு- தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். கருவேப்பிலை, உளுந்து, மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து புதினா, மல்லி, கருவேப்பிலை, சேர்த்து கிளறி இறக்கவும். இந்த மசாலா ஸ்மூத்தி குளிர்காலத்தில் அருந்துவதற்கு அசத்தலாக இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க.