தேவையானவை
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 2
அரிசி சாதம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ்,
பச்சைப் பட்டாணி, வெங்காயம் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனிடையே, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை வதங்கிக்கொண்டிருக்கும் காய்கறிக் கலவையில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். ஆறவைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறினால் பூண்டு மிளகாய் சாதம் தயார்.