புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: மரத்துல கரன்ட்டு கம்பத்துல ஏறாதீங்க: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை
சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர்...
வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழ்நாட்டில் 2 நாட்களில் மீண்டும் மழை பெய்யும்
சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. மேலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர் காற்று காரணமாக காலையில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது. அதன் தொடர்ச்சியாக குளிரும் நிலவுகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் வட மேற்கு திசையில்...
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓர் அடித்தளமாக மண்டல அளவில் பிரமாண்ட இளைஞர் அணியினர் சந்திப்பு
* திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு * முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓர் அடித்தளமாக அமையும் வகையில் மண்டல அளவில் பிரமாண்ட இளைஞர் அணியினர் சந்திப்பை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். திருவண்ணாமலையில் நடக்கும் இந்த சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற...
தேசிய நீர் விருது, நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு ஜனாதிபதி விருது பெற்ற கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
சென்னை: ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி ஆகியோர் தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
சென்னை: பிரபல தனியார் மருந்து நிறுவனம், புதுச்சேரியில் தங்கள் நிறுவனம் பெயரில் போலி மருந்துகளை தயாரிப்பதாக கடந்த மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், பிரபல நிறுவனத்தின் புதுச்சேரிக்கான விநியோகஸ்தர் உரிமையை பெற்று, மருந்து நிறுவனம் தயாரிக்கும் 36 வகையான மருந்துகளை...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சிண்டிகேட்டுக்கு உறுப்பினர் நியமனம் ரத்து செய்ய கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சிண்டிகேட்டுக்கு துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட உறுப்பினரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக பேராசிரியர் மதிவாணன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து...
யானைகள் இடமாற்றத்திற்கு வழிகாட்டு நெறிமுறை உருவாக்க 6 பேர் நிபுணர் குழு அமைப்பு: 2 காட்டு யானைகள் உயிரிழப்பால் தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிக்கை: சில மாதங்களில், 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் மூலம் தற்போதுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள், காட்டு விலங்குகளை, குறிப்பாக யானைகளை பிடித்தல், கையாளுதல், இடமாற்றம் செய்தல்,...
தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமனம்
சென்னை: தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக டெல்லியை சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:1.1.2026ஐ தகுதி தேதியாக கொண்டு நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பாக, தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு...
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்
சென்னை: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய 46வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இதில்,...

