நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. குந்தா, பந்தலூர் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 வாரங்களில் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ...
ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆபத்து நிறைந்த கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ...
எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை
சென்னை: எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறது. நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி, அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது என்றும் கூறினார்....
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: அனைத்து தரப்பு ஆதரவை திமுக பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்தவுடன் முகத்தை மூடிக் கொண்டு டெல்லி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி திமுகவை...
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்
FIDE Circuit தொடரில் புள்ளிகள் அடிப்படையில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகி உள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். ...
திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை: அமைச்சர் சேகர் பாபு!
சென்னை: திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல; திராவிட மண்ணான தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை. மக்கள் ஆன்மிகத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள், முருகனை வைத்து செய்யும் அரசியலை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ...
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். சித்த மருத்துவ பல்கலை. அமைப்பது தொடர்பான மசோதா 2022 ஏப்ரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2022-ல் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் 4 மாற்றங்களை ஆளுநர் கோரியிருந்த நிலையில் கடந்த அக்டோபரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. சித்த...
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்யாயா, நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆஜராக ஆணை. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ...
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ...

