தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியை போல ‘இந்தியா’ கூட்டணி உள்ளது: காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணி தற்போது செயலிழந்து வரும் நிலையில் இருப்பதாகவும், அதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் கூட்டணிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகள் தொய்வடைந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இக்கூட்டணி குறித்து கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்: இண்டிகோ நிறுவனம்!
இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிப்பு. இன்று (டிச.07) மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ...
விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு
பெங்களூரு: இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்த பயணிகளுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கி உதவிய பெங்களூரு விமான நிலைய ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாகக் கடுமையான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புதிய பணி நேர விதிகள் அமலாக்கம், பனிமூட்டம் மற்றும்...
விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; ரூ.54,000 கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!: நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
மும்பை: இண்டிகோ விமான சேவை பாதிப்பால் கட்டணம் பன்மடங்கு உயர்ந்த நிலையில், உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ.54 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியதாக நடிகை நிஹா ஷர்மா வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் இண்டிகோ விமான நிறுவனம் தனது விமானிகளின் பணி நேர விதிகளில் மாற்றங்களைச் சரியாகத் திட்டமிடாததால், போதிய ஊழியர்கள் இன்றி கடுமையான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்துள்ளது....
குற்ற வழக்குகளில் கைதாகி நீதி கிடைக்காமல் தவிக்கும் 50,000 சிறுவர்கள்: நாடு முழுவதும் வெளியான அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: சிறார் நீதி அமைப்பில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகளால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் நீதிச் சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015ன் படி, சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களைப் பாதுகாத்து அவர்களை நல்வழிப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்திற்கு மாறாக இந்தியாவின் சிறார் நீதி அமைப்பானது...
மத்திய பிரதேசத்தில் வசிக்கும் கணவரின் 2வது திருமணத்தை தடுங்க மோடி ஐயா... பாகிஸ்தான் பெண் உருக்கமான வீடியோ வெளியீடு
இந்தூர்: இந்தியாவில் வசிக்கும் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்ய முயல்வதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரதமர் மோடியிடம் நீதி கேட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்பவரும், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் விக்ரம் நாக்தேவ் என்பவரும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கராச்சியில் திருமணம் செய்து கொண்டனர்....
மேற்குவங்கத்தில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம்; பாபர் மசூதிக்கு அடிக்கல் - பிரம்மாண்ட கீதை பாராயணம்: தேர்தல் ெநருங்கும் நிலையில் மத நிகழ்வுகளால் மம்தாவுக்கு நெருக்கடி
கொல்கத்தா: முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தாவில் இன்று 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கீதை பாராயண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு கபே நடத்தி சாதனை தலைநிமிர்ந்த அக்னி பூக்கள்
ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகி முகத்தையே மறைத்து கொண்டு முடங்கிய பெண்கள் இன்று தங்களுடைய மன வலிமையில், அதனை வென்று தலை நிமிர்ந்து, மெகராலியில் ‘ஷெரோஸ்’ என்ற கபேவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் ஆசிட் தாக்குதலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. இதே பாதிப்புகள் ஆண்டுக்கு...
கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி; 50 பேர் காயம்
கோவா: வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார்...

