மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் 2 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு
மதுக்கரை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 3 மாணவிகள் வெளியிட்ட ஆடியோ, வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகளிர் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதன்பின், போலீசார் வீடியோ வெளியிட்ட மாணவியின் தாயாரை காவல் நிலையத்துக்கு...
கரூர் அருகே இளம்பெண்ணை வைத்து விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது
கரூர்: கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் 3 பெண் போலீசாருடன் நேற்று முன்தினம் மாலை ஊரணிமேட்டுக்கு சென்று ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டின்...
8 வயது மகன் கண்முன்னே மனைவியை தீவைத்து எரித்து கொன்ற கணவர்: ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது அம்பலம்
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்த விபின் பாட்டியை, நிக்கி என்ற பெண் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு...
கிரிக்கெட் மட்டையை திருடிய போது பார்த்ததால் 10 வயது சிறுமியை 20 முறை குத்தி கொன்ற 14 வயது சிறுவன்: ஐதராபாத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் பயங்கரம்
ஐதராபாத்: ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட் திருட முயன்றதை நேரில் பார்த்த 10 வயது சிறுமியை, 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குக்கட்பல்லி பகுதியில் கடந்த 18ம் தேதி, 10 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக்...
கோவையில் ரயிலில் ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள 23.1 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை: உ.பி. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் நேற்றிரவு கோவையில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள 23.1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுப்பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டதில் கஞ்சா சிக்கியுள்ளது. ஆர்.பி.எப் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
அரசு பள்ளியில் பாலியல் சீண்டல் புகார் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை: ‘இனி தவறாக நடக்க மாட்டார்கள்’ வீடியோ வெளியிட்ட பெண் பேட்டி
கிணத்துக்கடவு: அரசு பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் சீண்டல்...
சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை: பெற்றோர் உள்பட 4 பேர் கைது
சங்ககிரி: சேலம் அருகே பிறந்து 9 நாளேயான பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு பெங்களூருவில் விற்பனை செய்து விட்டு, ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக நாடகமாடிய பெற்றோர் உள்பட 4 பேரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு பெண்...
ராணிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வந்தவர் கைது: புகார்கள் குவிவதால் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து வந்த வேலு என்பவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கம் அவலூர் காலனியை சேர்ந்தவர் கங்கன். இவர் கடந்த மார்ச் 26ம் தேதி காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பெரும்புலிப்பாக்கம்...
பைக் பார்க்கிங் தகராறில் நெசவாளர் அடித்து கொலை: கடலூரில் தம்பதி வெறிச்செயல்
கடலூர்: கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர்(54). இவர் வண்டிப்பாளையம் சிங்கார முதலியார் தெருவில் உள்ள பாலன் (74) என்பவருக்கு சொந்தமான கைத்தறியில் நெசவாளராக பணியாற்றி வந்தார். தனது பைக்கை தறிக்கு எதிரே வசிக்கும் பொம்மை வேலை செய்யும் கார்த்திகேயன் என்பவர் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம். இதனால் மனோகருக்கும் கார்த்திகேயனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்...