மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை அப்பல்லோ சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதி மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள...

சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு

சென்னை: சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, டேங்கர் லாரி வாடகை உயர்வு உள்ளிட்டவற்றால் கட்டணத்தை உயர்த்தியதாக மெட்ரோ வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள்...

கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி; 50 பேர் காயம்

கோவா: வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார்...

திட்டமிடாத விதிகளால் பெரும் குழப்பம்; 5வது நாளாக விமான சேவை முடக்கம்: நாடு முழுவதும் ஏர்போர்ட்களில் தவிக்கும் பயணிகள்: பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஒன்றிய அரசு

  புதுடெல்லி: ஒன்றிய அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவசர கதியில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியதால், 5வது நாளாக இண்டிகோ விமான சேவை முடங்கி நாடு முழுவதும் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது....

காஷ்மீரில் கடும் குளிர் அலை: ஷோபியானில் -6.4 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் குளிர் அலை நீடித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனி நிலைக்கு வெகுவாகக் குறைந்துள்ளதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள ஷோபியான் பகுதி, பள்ளத்தாக்கிலேயே மிகவும் குளிரான இடமாகப் பதிவாகியுள்ளது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை -6.4 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்துள்ளது. பிற முக்கியப் பகுதிகளின்...

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

திருவாரூர்: ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக 2015ல் நடந்த போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி சொத்தை சேதப்படுத்திய வழக்கில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, பி.ஆர்....

கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை

புதுடெல்லி: மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள் குறிவைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்க்க வலியுறுத்தினாலும், நாட்டில் மூடநம்பிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நரேந்திர தபோல்கர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த...

விஜய்யுடன் ரகசிய சந்திப்பு; காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கட்சியிலிருந்து நீக்கம்?; டெல்லி தலைமைக்கு புகார் அளிக்க முடிவு: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதால் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதே நேரம்...

சட்டமேதை அம்பேத்கருக்கு அஞ்சலி; அரசியலமைப்பு சாசனத்தை காப்பதே கடமை: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் சூளுரை

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ‘மகாபரிநிர்வாண் திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நாளில், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளைத் தேசிய அளவில் கொண்டு செல்லும் நோக்கில், கடந்த 1992ம்...

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி நிவாரணப் பொருட்கள்: கப்பல் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

சென்னை: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.  வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவில் பெருமழை பெய்தது. இதனால் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது....