மேல் செங்கம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும்: மக்களவையில் எம்பி அண்ணாதுரை கோரிக்கை

  திருவண்ணாமலை, டிச.8:மேல் செங்கம் பகுதியில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் வனப்பகுதியில் மூலிகை மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என எம்பி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்செங்கம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம்...

நேற்று விடுமுறை தினத்தையொட்டி சாத்தனூர் அணையில் திரண்ட மக்கள்

  தண்டராம்பட்டு, டிச.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையானது 119 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.மேலும், 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில்...

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவாக சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

  திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. மேலும், மலைமீது தீபம் 5வது நாளாக காட்சியளித்தது.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் 29ம் தேதியும், மகா தேரோட்டம் 30ம்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை வேளாண் துறை செயலாளர் ஆய்வு திருவண்ணாமலையில் இந்த மாத இறுதியில்

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வேளாண் சங்கம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அரச செயலாளர் நேரடி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மாத இறுதியில் நடைபெறும் பல்வேறு அரசு நிழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது, நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட...

விளையாடிய குழந்தைகளை தூக்கி செல்ல முயன்ற மூதாட்டி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே

சேத்துப்பட்டு, டிச.7: சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே விளையாடிய குழந்தைகளை தூக்கிச் செல்ல முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் நேற்று மூதாட்டி ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பசிக்கு உணவு கேட்டபடி சுற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு வீட்டின்...

தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நிறைவு அலங்கார ரூபத்தில் சுப்பிரமணியர் பவனி திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவத்தின் நிறைவாக, ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபபெருவிழா கடந்த 3ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. அன்று மாலை 2,668 அடி உயர...

தூய்மை பணியாளர்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு 250 டன் குப்பை கழிவுகளை அகற்றிய

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் இரவு பகலாக திருவண்ணாமலை நகரையும், கிரிவலப்பாதையும் தூய்மை...

கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை மீட்டுத்தாருங்கள் மேஸ்திரி போலீசில் புகார் மனு வடிவேலு பட பாணியில் ருசிகரம்

சேத்துப்பட்டு, டிச.6: கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை மீட்டுத்தாருங்கள் என மேஸ்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பார்வதிபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(25), கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் சில...

2ம் நாள் தெப்பல் உற்சவம் பராசக்தி அம்மன் பவனி திருவண்ணாமலை ஐயங்குளத்தில்

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறைவாக நடைபெறும் தெப்பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்து முடிந்து. அதைத்தொடர்ந்து, ஐயங்குளத்தில் தெப்பல்...

ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றிய 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கலெக்டர் கைகூப்பி நன்றி தெரிவித்ததால் நெகிழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றினர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் கைகூப்பி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலையில் புகழ்மிக்க கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...