பிசி, ஓபிசி, டிஎன்சி மாணவர்களுக்கு கலை, தொழிற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை

  தஞ்சாவூர், டிச. 9: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ...

தஞ்சை மாவட்ட 3 தொகுதிகளில் ரூ.9 கோடியில் விளையாட்டு அரங்குகள்

  தஞ்சாவூர், டிச. 9: தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 3 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி என மொத்தம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 3 சிறு விளையாட்டு அரங்குகளுக்கான கட்டுமான பணியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி...

ஒரத்தநாடு அருகே நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி

  ஒரத்தநாடு, டிச. 9: ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பிலுள்ள தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ெநடுஞ்சாலை மற்றும் ஒரத்தநாடு மாவட்ட இதர சாலை இரண்டும் ஒய் வடிவில் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது....

மாநில அளவிலான சிலம்பம் போட்டி அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம்

பேராவூரணி, டிச.8: சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் ஊராட்சி சித்துக்காடு அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஓவியா, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 2ம் இடம்...

தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பேரவை கூட்டம்

தஞ்சாவூர், டிச.8: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க 9வது மாவட்ட பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கோட்ட தலைவர் ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க...

திருச்சி வானொலியில் தனித்திறன்களை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

பேராவூரணி, டிச.8: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். செருவாவிடுதி உடையார் தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளஞ்சியம்,...

ஆடுதுறை பகுதியில் 9ம் தேதி மின்தடை

  கும்பகோணம், டிச.7: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின் நிலையத்தில் வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  இதனால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர்,...

தஞ்சை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.41.40 லட்சத்தில் பொது விநியோக கட்டிடங்கள்

  தஞ்சாவூர், டிச.7: தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட 49வது வார்டு முனிசிபல் காலனி 7ம் தெரு மற்றும் 40வது வார்டு யாகப்பா நகர் மற்றும் அருளானந்தமாள் நகரில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடங்களை திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு...

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வு

  தஞ்சாவூர், டிச.7: பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் தியாக சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார கட்டிடம், சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ்...

பேராவூரணியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  பேராவூரணி, டிச.6: பேராவூரணி பெரியார் சிலை அருகே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திக மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் அருநல்லதம்பி, மாவட்ட தலைவர் வீரையன், மாவட்ட துணைச் செயலாளர் சோமநீலகண்டன் ஆகியோர்...