மேலூர் அருகே சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம்

  மேலூர், டிச. 9: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத, 4வது சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை, அர்ச்சனை நேற்று வழிபாடு நடைபெற்றது. மாலையில் யாகசாலை பூஜை துவங்கி சங்கரலிங்கம் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம்,...

பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை

  உசிலம்பட்டி, டிச. 9: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட சூழலில், இந்த கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளிக்கு வந்து செல்ல மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது....

முதியவர் தற்கொலை

  பேரையூர், டிச. 9: பேரையூர் அருகே அத்திபட்டியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி (60). இவர் நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சின்னப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.   ...

டி. கல்லுப்பட்டி அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சேடபட்டி மணிமாறன் வழங்கினார்

  பேரையூர், டிச. 8: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியில், திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் தலைமை தாங்கினார். டி.கல்லுப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், முன்னிலை வகித்தார். இதில் 1600 ரேஷன் கார்டுகள் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்...

திருமங்கலம் அருகே விஏஓ அலுவலகத்தின் மேற்கூரை பகுதி சேதம்

  திருமங்கலம் டிச. 8: திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில், நேற்று முன்தினம் மேற்கூரையில் உள்ள காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகாவின் எல்லையில் அமைந்துள்ள காங்கேயநத்தம் கிராமத்திற்குட்பட்டது எரம்பட்டி. இந்த இரு கிராமங்களுக்கும் சேர்ந்து, காங்கேயநத்தத்தில் விஏஓ அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கட்டி...

முக்தீஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை நடக்கிறது

  மதுரை, டிச. 8: மதுரையில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் இன்று (டிச.8) காலை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சூரிய ஒளிக்கதிர் நேரடியாக சுவாமி வீற்றிருந்து அருள் பாலிக்கும்...

மதுரையில் இன்று நடக்கும் பிரமாண்ட விழா தமிழக மக்களின் நலன், வளர்ச்சிக்கான திட்டப்பணிகளை தொடரும் முதல்வர்

  மதுரை, டிச. 7: தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (டிச.7) மதுரையில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் 1.41 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர், மேலமடை பகுதியில் வீரமங்கை வேலு நாச்சியார்...

அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் மரியாதை

  மதுரை, டிச. 7: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை, அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மதிமுக சார்பாக...

மண் அள்ளிய மூவர் கைது

  திருமங்கலம், டிச. 7: திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி அருகே கவுண்டமா நதியில், நேற்று சிலர் அனுமதியின்றி மண் அள்ளுவதாக விஏஓ குருசாமிக்கு தகவல் வந்தது. அவர் சென்றபோது பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மூன்று பேர் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கான அனுமதிச்சீட்டு அவர்களிடம் இல்லை. இதுதொடர்பாக, திருமங்கலம் தாலுகா போலீசில் விஏஓ புகார்...

அதிகாரி பெயரில் பணம் பறிக்க முயற்சி

  மதுரை, டிச. 6: மதுரை மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி வாட்ஸ் ஆப் சமூக வலைதள கணக்கு தொடங்கி நடந்துள்ள பணம் பறிக்கும் முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிகமிஷனராக இருப்பவர் சித்ரா விஜயன். இவரது உருவப் படத்துடன் கூடிய போலியான வாட்ஸ் ஆப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் மாநகராட்சியின் 60வது வார்டைச்...