கரூர்- திருச்சி சாலையில் பயன்பாடு இல்லாத நீர்தேக்க தொட்டியால் ஆபத்து

  கரூர், டிச.9: கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் தேமடைந்த பயன்பாடு இல்லாத மேல் நீர்தேக்க தொட்டியால் ஏற்படவுள்ள ஆபத்தயைடுத்து பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கரூர் காந்திகிராமம் அடுத்து உள்ள, ரயில்வே மேம்பாலத்தை கடந்த பின்னர், இடது பகுதியில், திருச்சி பிரதான சாலையின் ஓரத்தில் (சனப்பிரெட்டி ஊராட்சிக்கு) உட்பட்ட மேல் நீர்தேக்க தொட்டி சிதிலமடைந்தும், கான்கிரீட்டுகள்...

இ-பைலிங் முறையை ரத்து செய்ய குளித்தலை நீதிமன்றம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

  குளித்தலை, டிச.9: இ-பைலிங் முறையை ரத்து செய்ய குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் சாகுல் அமீது தலைமையிலும் செயலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்சமயம் டிச.1ம் தேதியிலிருந்து...

மழைக்காலங்களில் பொதுமக்கள் ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க வேண்டாம்

  கரூர், டிச. 9: மழைக்காலத்தில் பொதுமக்கள் ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க வேண்டாம் என மின்வாரியம் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மழைக்கால பராமரிப்பு குறித்து மின்வாரியம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சி செய்யக்கூடாது. வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள்...

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ரூ.2.40 கோடியில் புதிய திட்ட பணிகள்

க. பரமத்தி டிச.8: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கா.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்...

கோடங்கிப்பட்டி அருகே சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கரூர், டிச. 8: கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோடங்கிப்பட்டி, தனியார் மகளிர் கல்லு£ரி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் கோடங்கிப்பட்டியை தாண்டியதும் தனியார் மகளிர் கல்லூரிக்கு முன்னதாக ஆபத்தான வளைவுச் சாலை உள்ளது. மேலும், இந்த வளைவுச் சாலையில் மணல் பரப்புகள்...

தூண்கள் தேமடைந்து இடிந்து விழும் நிலையில் மகளிர் குழு அலுவலகம்

லாலாப்பேட்டை, நவ. 15: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுவிற்கான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி 10 வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. மேலும் கட்டிடத்தின் முகப்பில் உள்ள தூண் இரண்டாக பிளந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது....

ராயனூர் நினைவு ஸ்துபி அருகே குடிமகன்கள் அட்டகாசம்

  கரூர், டிச. 7: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவுச் சின்ன ஸ்தூபியை சுற்றிலும் ஆக்ரமிப்புகள் உள்ளது. இதனை முறையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு...

புகழூர் நகராட்சி எஸ்ஐஆர் படிவம் 100 சதவீதம் பூர்த்தி செய்து சாதனை

  வேலாயுதம்பாளையம், டிச. 7: புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் உள்ள 29 பூத்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 படிவங்கள் 25,579 படிவங்கள் பிஎல்ஓகள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளர்களிடம் இருந்து நேரடியாக 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறப்பட்டு அந்த படிவங்களை சம்பந்தப்பட்ட பல...

எஸ்ஐஆர் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  கரூர், டிச. 7: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக்கூடிய 1991ம் ஆண்டு இயக்கப்பட்ட வழிபாட்டு உரிமை பாதுகாப்புச்சட்டத்தை பாதுகாக்க கூறியும் வக்ஃப் அமல்மன்ட் அக்டை திரும்பப்பெற கூறியும் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்...

ஆளுநரை கண்டித்து திக ஆர்ப்பாட்டம்

  கரூர், டிச. 6: கரூரில் ஆளுநரை கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் குறித்து...