மாவட்ட ஓவியப்போட்டி மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவிக்கு முதல்பரிசு

அஞ்சுகிராமம், டிச.8: மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவி ஜான் பெட்ஸி (10ம் வகுப்பு) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். இதையடுத்து கலெக்டர் அழகுமீனா மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த...

கடியபட்டணம் கடற்கரையில் இறந்து கிடந்த முதியவர்

குளச்சல், டிச.8: மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் பேதுரு (81). நேற்று முன் தினம் சாப்பிவிட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பேதுருவை அப்பகுதி முழுவதும் தேடினர். பாத்திமா தெரு கடற்கரை பகுதியில் தேடி செல்லும்போது பேதுரு அங்கு மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு...

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ மாவட்ட தேர்வு போட்டி

அஞ்சுகிராமம், டிச.8: `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ போட்டியின் குமரி மாவட்ட தேர்வு போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளிகள் பங்கேற்றன. நடுவர்களாக விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் அருணாசலா கல்லூரி உதவி பேராசிரியர் ராதிகா ஆகியோர் செயல்பட்டனர். மொத்தம் 11 போட்டியாளர்கள்...

பாரதியார் பிறந்தநாளையொட்டி இந்திய மொழிகள் திருவிழா

நாகர்கோவில், டிச.7: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் உற்சவம் டிசம்பர் 11ம் தேதி வரை நடத்திட ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான பள்ளிகளிலும் பள்ளிகளின் பயிற்றுமொழிகளிலேயே இச்செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்....

கனகப்பபுரம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

அஞ்சுகிராமம், டிச.7: கனகப்பபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை (பொறுப்பு) பிரபாவதி தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி சுனிதா, துணைத்தலைவர் விஜிலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வக்கீல் சாம் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சி...

கேரள முதல்வரின் குறைதீர்ப்பு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு வாலிபர் கைது

திருவனந்தபுரம், டிச.7: கேரள முதல்வரின் குறைதீர்ப்பு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தில் `சிஎம் வித் மீ’ என்ற பெயரில் முதல்வர் குறைதீர்ப்பு அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு போன் செய்து தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்...

நித்திரவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் தாய், மகள் மீது வழக்கு

நித்திரவிளை, டிச.6: நித்திரவிளை அருகே முக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சரிதா. இவருக்கும் சொர்ணம்மாள் என்பவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை சரிதா தனது தாயார் சந்திரிகா (74) என்பவருடன் சென்று கட்டுமான பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சொர்ணம்மாள் மற்றும் அவரது மகள் லீலா ஆகியோர் சேர்ந்து சந்திரிகாவை கம்பால் தாக்கி...

தாழக்குடியில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு வாகன பேரணி

ஆரல்வாய்மொழி, டிச. 6: தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. கலெக்டர் அழகுமீனா அறிவுரை படியும், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் பிரவீனா அறிவுறுத்தல் படியும் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரத வீதிகளில் பயிர் காப்பீடு திட்டத்திற்கான பயன்பாடுகளையும் அதில் விவசாயிகள் சேர்வதற்கான அறிவுரையும் கூறி...

கன்னியாகுமரியில் தேசிய ஊடக பயிலரங்கம் தொடக்கம் 8 நாட்கள் நடக்கிறது

கன்னியாகுமரி, டிச.6: கன்னியாகுமரியில் தேசிய அளவில் 8வது மாநிலங்களுக்கு இடையேயான அறிவுஜீவி ஊடக பயிலரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடக்கும் இந்த பயிலரங்கத்தில் முயற்சியிலிருந்து வெற்றிக்கு நேர்மறை சிந்தனையின் மதிப்பு என்ற தலைப்பில் விவேகானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கேந்திர மக்கள் தொடர்பு அலுவலர் சுனில் ராம் தொடங்கி வைத்தார். அரியானா மாநில சோனிபட்...

கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

நித்திரவிளை, டிச.5: குமரி மாவட்டத்தில் பரவலாக வெறிநாய் தொல்லை இருப்பதாகவும், அதனால் உள்ளாட்சி நிர்வாகம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொல்லங்கோடு நகராட்சி பகுதியான நித்திரவிளை, காஞ்சாம்புறம், கே.ஆர்.புரம், பாலாமடம், கலிங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை நகராட்சி ஆணையர் துர்கா...