பூசாரி தத்தெடுத்த 3 மாத ஆண் குழந்தை திடீர் சாவு

  ஈரோடு, டிச. 7: ஈரோடு மாவட்டம், கொடுமுடி குள்ளக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜா (30). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள விநாயகர் கோயில் பூசாரி. இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும், குழந்தை இல்லை. இதனால், கோயிலுக்கு வரும் சென்னையை சேர்ந்த சுப என்ற பெண், அவருக்கு தெரிந்தவர்கள்...

பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவம்

  சத்தியமங்கலம், டிச. 7: பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் செல்வன் (24), பெயிண்டர். இவரது மனைவி திரிஷா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக புஞ்சைப் புளியம்பட்டியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து திரிஷாவை மீட்டு, சத்தியமங்கலம்...

1.5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

  கோபி, டிச. 7: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கோபி மதுவிலக்கு போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து...

ஈரோட்டில் பலத்த காற்று வாகை மரம் வேருடன் சாய்ந்தது

  ஈரோடு, டிச. 6: ஈரோடு, புதுமஜீத் வீதியில் இருந்து கந்தசாமி வீதி சாலையில் வாகை மரம் ஒன்று இருந்தது. நேற்று இரவு திடீரென பலத்த காற்று வீசியதால் வாகை மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது, மரத்தின் கிளைகள் அந்த மின்கம்பிகளில் பட்டு, கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்தது. தகவலறிந்த மின்வாரிய...

ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி: தொழிலாளி அதிரடி கைது

  ஈரோடு, டிச. 6: ஈரோட்டில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில், காய்கறி கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.  ஈரோடு கொல்லம்பாளையம், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே ஐஓபி வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 2ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் அந்த ஏடிஎம்...

திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தொடங்கி வைத்தார்

  கோபி,டிச.6: கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் வடக்கு...

தாளவாடி தொழிலதிபர் கடத்தல்? போலீசார் விசாரணை

  சத்தியமங்கலம், டிச. 5: ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார் (36). இவர், தாளவாடி ஓசூர் சாலையில் ஜவுளிக்கடை, ஹார்டுவேர் கடை மற்றும் தங்க நகைகள் அடமானத்திற்கு பணம் கொடுக்கும் பவுன் புரோக்கிங் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கிஷோர்குமார் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில்...

இ-பைலிங் முறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

  ஈரோடு, டிச. 5: இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இ-பைலிங் முறை கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்நிலையில் இ-பைலிங் முறையை கண்டித்து, ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சுந்தர் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சார்பில், நீதிமன்ற...

நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

  மொடக்குறிச்சி, டிச.5: நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு தினசரி அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. 30ம் தேதி...

ஜம்பை-நல்லிபாளையம் சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு

  பவானி, டிச.3: பவானியை அடுத்த ஜம்பை-நல்லிபாளையம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஜம்பை-நல்லிபாளையம் சாலை ஒரு வழித்தடத்தை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.1.10...