பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 13 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட நிலையில், ஓபன்னா மற்றும் கங்காதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.