அரூர், ஜூலை 10: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 110 விவசாயிகள் 750 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். பிசி ரக பருத்தி குவிண்டால் ₹6,799 முதல் ₹7,632 வரை ஏலம் போனது. மொத்தம் ₹17.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
+
Advertisement


