Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேடசந்தூர் அருகே

வேடசந்தூர், ஜூலை 31: வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டியில் பேவர் பிளாக் கம்பெனி நடத்தி வருபவர் ஸ்டீபன் விக்னேஷ் (30). இவரது கம்பெனியில் டிரைவராக மதுரை மாவட்டம், ஏ.வலையபட்டியை சேர்ந்த ஆனந்த்பாபு (34) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் அவரை பணியிலிருந்து ஸ்டீபன் விக்னேஷ் நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஆனந்த்பாபு பேவர் பிளாக் கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து லேப்டாப், மர அறுவை இயந்திரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த்பாபுவை கைது செய்தனர்.