Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகள் வாங்க வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 20: உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் போது விற்பனை பட்டியலை பெற வேண்டும். பட்டியலில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். தனி நபர்களிடமோ, வியாபாரிகளிடமோ விதைகளை வாங்க கூடாது.

விதைகளை விதைப்பதற்கு முன் மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பிறகே விதைக்க வேண்டும். மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்கும் போது விவர அட்டையில் 14காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதார விதை மற்றும் சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையில் பதிவு செய்யப்பட்ட ரகங்களை பணி விதை மாதிரி சோதனை முடிவறிக்கை பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். விதை உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை மற்றும் தரமற்ற விதைகள் விற்பனை செய்வோர் மீது விதைகள் சட்டம் 1966ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.