Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விருத்தாசலம் அருகே பெண்ணாடத்தில் வாகனம் மோதி இறந்து கிடந்த அரியவகை மரநாய்

விருத்தாசலம், மே 29: பெண்ணாடம் சிலுப்பனூர் சாலையில் வாகனம் மோதி இறந்த மரநாயை வனத்துறையினர் கைப்பற்றி காப்புக்காட்டில் புதைத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் சிலுப்பனூர் செல்லும் சாலையில் நேற்று அரிய வகை விலங்கான மரநாய் ஒன்று அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த மரநாயை மீட்டு விருத்தாசலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாகனம் மோதி இறந்த மரநாயை கைப்பற்றி பெண்ணாடம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து, காப்பு காட்டுக்கு கொண்டு சென்று புதைத்தனர். இதுபோன்று மான், மயில், போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி இந்த பகுதியில் இறந்து கிடப்பது வாடிக்கையாக உள்ள நிலையில், வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.