Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 5 பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பு

அந்தியூர், ஜூலை 6: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 18 வயது கீழ் உள்ளவர்கள் பைக், ஸ்கூட்டர், மொபெட் ஆகியவைகள் ஓட்டுகிறார்களா என வாகன தணிக்கை செய்தனர்.

இதில் 5 சிறுவர்கள் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்ட வேண்டாம் என்றும் கட்டாயம் தலைகாசம் அணிந்து வாகனங்களை ஓட்டுங்கள் என்றும் அறிவுறுத்தினர்.