Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாலிபர் கழுத்தில் பீர் பாட்டில் குத்து நண்பர்கள் 2 பேர் கைது வேலூரில் மது அருந்திய தகராறில்

வேலூர் ஜூன் 8: வேலூரில் மது அருந்திய தகராறில் வாலிபருக்கு கழுத்தில் பீர் பாட்டில் குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பந்தகல்லி மாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(30), கம்பி கட்டும் தொழிலாளி. இவரது நண்பர்கள் ஓசூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(49), வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(42). இவர்கள் 3 பேரும் ஓசூரில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை முடிந்த நிலையில், சென்னைக்கு வேலைக்கு செல்வதற்காக வேலூரில் உள்ள சிவக்குமார் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தனர். பின்னர் தெள்ளூர் பகுதியில் உள்ள வேலூர்-ஊசூர் ரோட்டில் நண்பர்கள் 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதனிடையே அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் அர்ஜூனனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி உள்ளனர். இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அர்ஜூனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் சிவகுமாரை கைது செய்தனர்.