Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது

புதுச்சேரி, மே 29: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் மீது 2 கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ரவுடி ஷாருக்கான் பணம் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ரவுடி ஷாருக்கான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய, புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு ரெட்டியார்பாளையம் போலீசார் பரிந்துரை செய்திருந்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில், ரவுடி ஷாருக்கான் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.