Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு நேர்த்திக்கடன்

வலங்கைமான், செப். 2: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். அதேபோன்று, ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாடைக்காவடி பால்குடம் உள்ளிட்டவை எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். இந்நிலையில், ஆவணி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பாடைக்காவடி திருவிழாவை போன்று நேற்று பாடை காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து அம்மனுக்கு சிலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ஆவணிக்கடை ஞாயிறு அன்று ஆலயத்துக்கு அருகில் உள்ள புனித குளத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.