Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

அரூர், ஜூன் 6: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். இதில் கடந்த மாதம் 233 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வந்த வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 81 வாகனங்களுக்கு வரி ரூ.2,38,850, அபராத தொகை ரூ.2,68,000 என மொத்தம் ரூ.5,06,850 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் முறையான ஆவணம் இல்லாத, 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். காரின் முன், பின்புறத்தில் பம்பர் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றார்.