Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.1.67 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ஜூன் 14: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை ராசிபுரம் கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு கொண்டுவந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர். நேற்று நடத்த ஏலத்துக்கு விவசாயிகள் 303 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ஏலத்தில் பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ரூ.580க்கும், குறைந்தபட்சம் ரூ.419க்கும், சராசரியாக ரூ.551க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 303 கிலோ பட்டுக்கூடுகள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 163 ரூபாய்க்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.