Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மூணாறு அருகே டூவீலர் மீது பஸ் மோதி விபத்து: இருவர் படுகாயம்

மூணாறு, ஜூலை 14: மூணாறு அருகே டூவீலர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் இருவர் காயமடைந்தனர்.எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த பிரயேஷ் (20), திருப்புணித்துறையைச் சேர்ந்த அபிராம் (16) ஆகியோர் நேற்று முன் தினம் ஒரு டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாட்டுப்பட்டி வழியாக வட்டவடைக்கு சென்றனர். டூவீலரை பிரயேஷ் ஓட்டியுள்ளார். இந்நிலையில் டூவீலர் எல்லப்பட்டி எஸ்டேட் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வட்டவடையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த கேரள அரசு பஸ், டூவீலர் மீது பலமாக மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட பிரயேஷ், அபிராம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கூடுதல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.