Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முத்தான முன்னுதாரணம் அரசு ஆசிரிய தம்பதி மகள் அரசு பள்ளியில் சேர்க்கை நாங்களும் இப்படித்தான் படித்து வந்தோம் என பெருமிதம்

கீழ்வேளூர், ஜூன் 11: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய தம்பதி, தங்களது குழந்தையை வலிவலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலேயே படிக்க வைத்து வருகின்றனர். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளியில் படிப்பு தரம் உயர வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது. இதற்கு முன்னுதாரணமாக நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கீரம்பேர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி வேம்பு கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவர்களது மகளை வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு சேர்த்துள்ளனர். இவரது சேர்க்கைக்கான ஆணையை பள்ளி தலைமை ஆசிரியர் முரளி வழங்கினார்.இது குறித்து மாணவியின் பெற்றோர்களான ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அரசு பள்ளியில் படித்து விட்டு தான் இப்பணிக்கு வந்துள்ளோம். எனவே எங்களது குழந்தையையும் அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து சேர்த்துள்ளோம். இதுபோல் மற்ற ஆசிரியர்களும் அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.