அறந்தாங்கி,,நவ.6: அறந்தாங்கி வடகரை முருகன்கோவிலில் 4-ம் நாள் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் உள்ள வடகரை சிவசுப்பிரமணிய தேவ சேனா சுவாமிகளுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவசுப்பிரமணிய தேவ சேனா சுவாமியை தரிசனம் செய்தனர்.
+
Advertisement