Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை, ஏப். 24: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப், மயிலாடுதுறை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை மிட்டவுன் ஆகியவை இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்திட உள்ளது. 25.04.2025 வெள்ளிக்கிழமையன்று கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில், காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்ப்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை பாஸ்போட் அளவு புகைப்படம். முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறவும்.

மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுகள் தங்களது சுய விளம்பரங்களை www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04364299790 / 9499055904 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறை நிறுவனங்களில் வேலைதேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.