Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது விற்ற 2 பேர் கைது

ஈரோடு, மே 7: ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு போலீஸ் எஸ்எஸ்ஐ திருலோகசந்தர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க ரோந்து சென்றனர்.

அப்போது, அந்தியூர் பகுதியில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தாளவாடி பகுதியில் ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மது விற்பனைக்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தலமலையை சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.