Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போதையில் போலீசாரிடம் தகராறு செய்த டிரைவர் கைது

கோவை ஜூலை 31: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் ரோடு மின் வாரிய அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த லாரி டிரைவர் முகமது நஸ்ருதீன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து முகமது நஸ்ருதீன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். தேவகுமார் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.