பொன்னமராவதி, ஏப்.24: பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் குருஜை விழா நடந்தது. திருநாவுக்கரசர் குருஜையை முன்னிட்டு திருநாவுக்கரசருக்கு அபிஷேக செய்யப்பட்டது. பின்னர் திருநாவுக்கரசர் விண்ணப்பம் செய்தல் நடைபெற்றது. இதன் பின்னர் தேவாரம் விண்ணப்பம் செய்தல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயில் முற்றோதல் குழுவினரால் முற்றோதல் பாடப்பட்டது. சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
+
Advertisement


